ஐபிஎல் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற மகத்தான சாதனையை விராட் கோலி நிகழ்த்திய நிலையில், இந்த சாதனையை ரோகித் சர்மா மட்டுமே முறியடிக்க ஒரு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி அபாரமாக விளையாடி கோப்பையை வென்ற நிலையில், விராட் கோலி தனிப்பட்ட முறையில் ஒரு புதிய சாதனையை செய்துள்ளார். நேற்று அவர் பேட்டிங் செய்யும்போது, முதல் பவுண்டரியை அடித்தவுடன் அவர் ஐபிஎல் தொடரில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன் ஷிகர் தவான் 768 பௌண்டரிகள் அடித்து இருந்த நிலையில், விராட் கோலி 769 பௌண்டரிகள் அடித்து அதிக பவுண்டரிகள் அடித்த பட்டியலில் முதல் இடத்தை பெற்றார். இரண்டாவது இடத்தில் ஷிகர் தவான், மூன்றாவது இடத்தில் டேவிட் வார்னர் ஆகியோர் உள்ளனர்.
ரோகித் சர்மா இதுவரை 640 பவுண்டரிகள் அடித்துள்ள நிலையில், இவர் ஒருவர் மட்டுமே விராட் கோலியின் சாதனையை முறியடிக்க ஒரு சிறு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
விராட் கோலியின் 18 ஆண்டு கால ஐபிஎல் கனவு நேற்று நனவான சந்தோஷம் ஒரு பக்கம் இருக்கும் நிலையில், ஐபிஎல் தொடரில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற பெருமைக்குரிய சாதனையையும் விராட் கோலி செய்துள்ளார். இதையடுத்து, அவருக்கு ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.