கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த 18 ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடக்கவுள்ளது.. ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் லீக் போட்டிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இவையிரண்டுமே இதுவரைக் கோப்பையை வெல்லாத அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இந்த இரு அணிகளுக்குமே சமமான ஆதரவு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் பெங்களூர் அணியில் கோலி இருப்பதால் அந்த அணி நீண்டகாலமாக கோப்பையை வெல்லாததாலும் அந்த அணிக்கு ரசிகர்கள் அதிக ஆதரவு தரவாய்ப்புள்ளது.
இந்நிலையில் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இன்றைய இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் மனைவிக்கு பிரசவம் நடக்கவுள்ளதை அடுத்து அவர் இங்கிலாந்துக்கு செல்லவுள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஆர் சி பி அணிக்கு நிச்சயம் இறுதிப் போட்டியில் ஒரு பின்னடவை உருவாக்கும்.