2025 ஆம் ஆண்டின் ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்ற பெங்களூரு அணிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த வருடம் சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாட வாழ்த்துகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி திரில் வெற்றி பெற்றது. விராட் கோலியின் 18 ஆண்டுகால கோப்பை கனவு நேற்று தான் நனவாகியது.
இதனை அடுத்து பெங்களூரு அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது
ஆச்சரியங்கள் நிறைந்த இந்த சீசனுக்கு, நிறைவான ஒரு முடிவு கிடைத்துள்ளது. விராட் கோலி, "இந்த கோப்பை கனவை பல ஆண்டுகளாக சுமந்து உள்ளார். இப்போது, இந்த மகுடம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார். மேலும், "சென்னை சூப்பர் கிங்ஸ் இடமிருந்து அடுத்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன்," என்றும் அவர் கூறியுள்ளார்.