Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 பந்துகளை வீணாக்கிய 2 வீரர்கள்… இதுதான் ராஜ்ஸ்தான் ராயல்ஸின் தோல்விக்குக் காரணம்!

4 பந்துகளை வீணாக்கிய 2 வீரர்கள்… இதுதான் ராஜ்ஸ்தான் ராயல்ஸின் தோல்விக்குக் காரணம்!
, செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (08:19 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தோல்விக்கு ராகுல் திவேட்டியா மற்றும் கிரிஸ் மோரிஸ் ஆகியோர் வீணாக்கிய இரண்டு பந்துகள் முக்கியக் காரணமாகின.

14வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட்  தொடர் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. நேற்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி பரபரப்பின் உச்சத்தை தொட்டது. 222 ரன்களை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் 117 ரன்கள் சேர்த்து கிட்டத்தட்ட வெற்றி பெறவைக்கும் நிலைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் கடைசி பந்தில் அவர் அவுட் ஆனதால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இவ்வளவு பரபரப்பான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் இறங்கி ராகுல் திவேட்டியா மற்றும் கிரிஸ் மோரிஸ் ஆகியோர் தலா 2 பந்துகளை வீணாக்கினர். இதனால் கடைசி கட்டத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் வெற்றியை வாத்தி கம்மிங் போட்டு கொண்டாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் – வைரல் வீடியோ