Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பஞ்சாப் போராடி தோல்வி.. பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்..!

Advertiesment
Punjab Kings
, புதன், 17 மே 2023 (23:26 IST)
இன்று நடைபெற்ற 64-வது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 214 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்ததால் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இன்றைய தோல்வியின் காரணமாக பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. ஆனால் அதே நேரத்தில் பஞ்சாப் தோல்வியால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். 
 
இந்த நிலையில் மும்பை, பெங்களூரு, லக்னோ ஆகிய மூன்று அணிகளில் ஏதாவது ஒரு அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்-2023; ரிலீரூசோ, டேவிட் வார்னர் அதிரடி பேட்டிங்...பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்!