Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்-2023; டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடி முடிவு

ஐபிஎல்-2023; டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடி முடிவு
, புதன், 17 மே 2023 (19:35 IST)
ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 2023,  16வது சீசன்  தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் நிலையில்,  லீக் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

64வது லீக் சுற்று ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்ல்ஸ் அணி விளையாடுகிறது.

இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் தவான் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வுசெய்துள்ளார்.

எனவே முதலில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

பஞ்சாப் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றியும்,6 தோல்வியும் பெற்று, 12  புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.

இனி வரவுள்ள 2லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்றால்தான் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல முடியும் என்ற நெருக்கடி உள்ளதால் இன்றைய போட்டியில் ஜெயிக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இதுவரை வார்னர் தலைமையிலான டெல்லி அணி 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியும், 8 தோல்வியும் பெற்று, 8 புள்ளிகளுடன் கடைசி இடத்திலுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்: சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு!