Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொந்த மண்ணில் 6-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி.. அழுது கொண்டே வெளியேறிய நெய்மர்..!

Advertiesment
நெய்மர்

Siva

, திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (11:01 IST)
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் நெய்மர், தான் முன்பு விளையாடிய சாண்டோஸ் கிளப் அணிக்காக ஆடிய போட்டியில், அந்த அணி 6-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்ததால், மைதானத்தைவிட்டு கண்ணீருடன் வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரேசில் நாட்டில் நடந்த கால்பந்துப் போட்டியில், சாண்டோஸ் அணிக்காக நெய்மர் விளையாடினார். தனது சொந்த நாட்டு கிளப் அணிக்கு அவர் திரும்பியதால், இந்த போட்டியின் மூலம் அவர் மீண்டும் தனது ஆதிக்கத்தைக் காட்டுவார் என்றும், அவரது அணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், போட்டி ஆரம்பித்ததிலிருந்தே சாண்டோஸ் அணியின் ஆட்டம் திசை மாறியது. அந்த அணி ஒரு கோல் கூட போடாமல் படுதோல்வி அடைந்தது. எதிரணி ஆறு கோல்களை போட்டு எளிதாக வெற்றி பெற்றது.
 
இந்த படுதோல்வியை தாங்க முடியாமல், சாண்டோஸ் வீரர் நெய்மர் கண்ணீருடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார். நெய்மரின் இந்த சோகமான நிலையை பார்த்த ரசிகர்களும் கண்ணீருடன் இருந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது கால்பந்து ரசிகர்களிடையே ஒரு சோகமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

17years of Runmachine: வரலாற்றில் இன்று… கோலி சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான நாள்!