Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கே எல் ராகுலிடம் மன்னிப்புக் கேட்டேன் – மேக்ஸ்வெல் பதில்!

Advertiesment
பஞ்சாப்
, சனி, 28 நவம்பர் 2020 (19:44 IST)
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடததற்கு கே எல் ராகுலிடம் மன்னிப்புக் கேட்டுள்ளதாக க்ளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரை மோசமாக தொடங்கிய அணியான  கிங்ஸ் லெவன் பஞ்சாப் இரண்டாவது பாதியில் தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப்க்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி இரண்டு போட்டிகளை தோற்றதால் பிளே ஆஃப் கனவு உண்மையிலேயே கனவானது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு அணியை மெருகேற்றும் விதமாக அந்த அணியில் இருந்து மோசமாக விளையாடிய காட்ரெல் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகிய இருவரையும் கழட்டிவிட போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது நடக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடினார். இது பஞ்சாப் ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

இது தொடர்பாக ரசிகர்கள் மேக்ஸ்வெல்லைக் கேலியாக பேச அது குறித்து பேசிய மேக்ஸ்வெல் ‘ நான் அதற்காக கே எல் ராகுலிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டேன்’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு அபராதம்...