Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஸ்வின் உள்ளே வரவேண்டும் என்றால் சுந்தர் மோசமாக விளையாடவேண்டும் – கோலி பதில்!

அஸ்வின் உள்ளே வரவேண்டும் என்றால் சுந்தர் மோசமாக விளையாடவேண்டும் – கோலி பதில்!
, வெள்ளி, 12 மார்ச் 2021 (10:30 IST)
இந்திய டி 20 அணியில் அஸ்வின் இடம்பெறுவது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.

இந்திய அணியின் மிகச்சிறந்த சுழல்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் டி 20 தொடரான ஐபிஎல் தொடரில் கூட அவரின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதுபற்றிக் கோலியிடம் கேள்வி எழுப்பியபோது ‘டி 20 அணியின் சுந்தர் இடம்பிடித்து பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒரு இடத்துக்கு ஒரே மாதிரியாக இரு பந்துவீச்சாளர்களை சேர்ப்பது கடினம். சுந்தர் மோசமாக விளையாடினால் அஸ்வினுக்கு இடம் கிடைத்திருக்கும். இதுபோன்ற கேள்விகளை தர்க்கப் பூர்வமாகதான் அனுக வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவானுக்கு வாய்ப்பில்லை… ராகுல்தான் ஒப்பனர் – கோலி உறுதி!