Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தவானுக்கு வாய்ப்பில்லை… ராகுல்தான் ஒப்பனர் – கோலி உறுதி!

தவானுக்கு வாய்ப்பில்லை… ராகுல்தான் ஒப்பனர் – கோலி உறுதி!
, வெள்ளி, 12 மார்ச் 2021 (10:20 IST)
இங்கிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் டி 20 தொடரில் கே எல் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்லது. இதில் டெஸ்ட் தொடர் விளையாடி முடிக்கப்பட்டு இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் மற்றும் தவான் ஆகிய மூவரில் யார் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறக்கப்படுவார் என்ற கேள்விக்கு கோலி பதிலளித்துள்ளார். அதில் ‘தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் ராகுல் களமிறக்கப்படுவார்கள். தவான் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார். இவர்கள் இருவருக்கும் காயம் அல்லது ஓய்வு அளிக்கப்படும்போது தவான் களமிறக்கப்படுவார்’ எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி 20 தொடர் தரவரிசையில் முதல் இடம் பிடிக்க இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு!