Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி.. தொடரை இழக்கின்றதா இந்தியா?

Siva
திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (07:41 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றிக்கு மிக அருகில் உள்ளதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவி வருகிறது.
 
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 224 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 396 ரன்களும் எடுத்தது.
 
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்ததால், வெற்றி பெற அவர்களுக்கு 374 ரன்கள் தேவைப்பட்டது.
 
நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 35 ரன்களே தேவை. கைவசம் 4 விக்கெட்டுகள் இருப்பதால், இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பே அதிகம் உள்ளது.
 
இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில், ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இருவரும் அபாரமாக விளையாடி சதமடித்து, அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
 
இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டத்தில், எஞ்சிய 35 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணி இந்த தொடரை வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு இது மீண்டும் ஒரு தோல்வியாக அமைய வாய்ப்பு உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments