Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்சிலோனாவுக்கு பிரியாவிடை; பிரபல கிளப்பில் இணைந்த மெஸ்ஸி!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (16:34 IST)
கடந்த 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி அந்த அணியில் இருந்து விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் பிஎஸ்ஜி அணிகள் அணியில் அவர் இணைந்துள்ளார்.

 
சற்றுமுன் பார்சிலோனா அணியின் டுவிட்டர் பக்கத்தில் மெஸ்ஸி இனி தங்களது அணிக்காக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பார்சிலோனா அணிக்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தம் காலாவதி ஆனதை அடுத்து அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் பார்சிலோனா அணியின் நிர்வாகம் நிதி நெருங்கடியில் சிக்கியுள்ளதாக மிகப்பெரிய அளவில் மெஸ்ஸிக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக வெளிப்படையாகவே கூறியது. இதையே மெஸ்ஸியும் கூறி, அந்த அணியில் இருந்து வெளியேறுவது குறித்து வேதனை தெரிவித்தார்.

இந்நிலையில், 15 வயதில் இருந்து பார்சிலோனா அணியில் விளையாடி வரும் நிலையில் திடீரென்று அங்கிருந்து வெளியேறிய நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி, பிரபல கால்பந்து அணி பிஎஸ்ஜி யுடன் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த அணியில்தான் பிரபல வீரர் நெய்மர் விளையாடி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments