இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் விளையாட இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு, கிரிக்கெட் ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்திருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சிஇஓ டாட் கிரீன்பெர்க், அஸ்வின் போன்ற ஒரு சாம்பியன் வீரர் பிக் பாஷ் லீக் தொடருக்கு வந்தால் அது தங்கள் அணிக்கு மிகவும் மதிப்பு மிக்கதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு வருவது தங்களுக்கு பெரும் வரவேற்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அஸ்வின் இங்கிலாந்தின் 'தி ஹன்ட்ரெட்' மற்றும் துபாயின் 'ஐஎல்டி20' ஆகிய வெளிநாட்டு லீக் தொடர்களிலும் விளையாட ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின. அஸ்வின் இதுவரை 333 டி20 போட்டிகளில் 317 விக்கெட்டுகளையும், 1,233 ரன்களையும் எடுத்துள்ளார்.