Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆண்கள் அணியை போலவே பெண்கள் அணிக்கும் வெற்றி பேரணி உண்டா ? பிசிசிஐ விளக்கம்..!

Advertiesment
இந்திய மகளிர் அணி

Siva

, திங்கள், 3 நவம்பர் 2025 (15:49 IST)
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தங்களின் முதல் ஒருநாள் உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
 
ஆண்கள் அணிக்கு கிடைத்ததை போல, மகளிர் அணிக்கு வெற்றி பேரணி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குப்பதிலளித்த பிசிசிஐ செயலாளர் தேபாஜித் சைகியா, தற்போதுவரை எந்த பேரணிக்கும் திட்டமிடப்படவில்லை என்று கூறியுள்ளார். ஐ.சி.சி. கூட்டத்திற்காக துபாய் சென்றுள்ளதாகவும், திரும்பி வந்த பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
எனினும், பிரதமர் நரேந்திர மோடி வரும் நவம்பர் 5-ஆம் தேதி முழு அணியையும் சந்தித்து பாராட்டவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இறுதி போட்டியில், தீப்தி ஷர்மா அரை சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷஃபாலி வர்மா 87 ரன்கள் குவித்ததுடன், 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகி விருதை வென்றார்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை போட்டி நடந்து கொண்டிருந்தபோது வீராங்கனை வீட்டில் நடந்த துக்கம்.. தகவலை மறைத்த குடும்பத்தினர்..