Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெங்களூரு பந்துவீச்சாளர்களை பொளந்து கட்டிய கொல்கத்தா.. 201 இலக்கு..!

பெங்களூரு பந்துவீச்சாளர்களை பொளந்து கட்டிய கொல்கத்தா.. 201 இலக்கு..!
, புதன், 26 ஏப்ரல் 2023 (21:17 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36வது போட்டி இன்று பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் கொல்கத்தா பேட்டிங் செய்தது. 
 
அந்த அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் மிக அபாரமாக விளையாடிய 56 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரானா 48 ரன்களும் வெங்கடேஷ் ஐயர் 31 ரன்கள் எடுத்தனர் 
 
பெங்களூரு அணியை பொறுத்தவரை விஜயகுமார் மற்றும் ஹசரங்கா தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த நிலையில் 201 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் பெங்களூர் அணி பேட்டிங் செய்ய உள்ளது. பெங்களூரு அணி இந்த போட்டியில்  வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு.. கொல்கத்தாவுக்கு வெற்றி கிடைக்குமா?