Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்டோபர் 21 மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!

அக்டோபர் 21 மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!
, வெள்ளி, 18 அக்டோபர் 2019 (14:15 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் எதிர்பார்த்த நாளுக்கு முன்னதாகவே பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கணிசமான அளவு மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

பல இடங்களில் மணிக்கணக்காக ஒரே சீராக மழை பெய்து கொண்டே இருந்துள்ளது. இந்த பருவமழை நாளுக்கு நாள் தீவிரமைடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் பலமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த இரண்டு நாட்களும் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதில் சொல்லாமல் திசை திருப்புகிறாரா ராமதாஸ்? – ஸ்டாலினுடன் தொடரும் வாக்குவாதம்!