Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி; விழுப்புரத்தில் முழுவதும் நிரம்பிய ஏரிகள்! – பொதுப்பணித்துறை தகவல்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (17:50 IST)
தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் விழுப்புரத்தில் உள்ள நீர்நிலைகள் முழுவதும் நிரம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் பெய்த மழையில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் தற்போது பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி விழுப்புரத்தில் உள்ள 506 ஏரிகளில் 300 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியுள்ளதாகவும், 60 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments