Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனமழை எதிரொலி; விழுப்புரத்தில் முழுவதும் நிரம்பிய ஏரிகள்! – பொதுப்பணித்துறை தகவல்!

கனமழை எதிரொலி; விழுப்புரத்தில் முழுவதும் நிரம்பிய ஏரிகள்! – பொதுப்பணித்துறை தகவல்!
, வெள்ளி, 12 நவம்பர் 2021 (17:50 IST)
தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் விழுப்புரத்தில் உள்ள நீர்நிலைகள் முழுவதும் நிரம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் பெய்த மழையில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் தற்போது பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி விழுப்புரத்தில் உள்ள 506 ஏரிகளில் 300 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியுள்ளதாகவும், 60 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் கைது!