இந்த பத்தில் ஒரு சின்னத்தை தாருங்கள்: தேர்தல் ஆணையத்திடம் தவெக மனு..!

Mahendran
செவ்வாய், 11 நவம்பர் 2025 (12:08 IST)
வரும் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களம் காணவுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்த ஒரு பொது சின்னம் ஒதுக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.
 
முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் கட்சியாக, த.வெ.க. நிர்வாகிகள் குழு இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தலைமையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை இன்று நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்தது.
 
த.வெ.க. சமர்ப்பித்த விருப்ப பட்டியலில் விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை உள்ளிட்ட சுமார் 10 சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஒன்றை பொது சின்னமாக ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்த சின்னம் ஒதுக்கீடு குறித்த இறுதி முடிவை தேர்தல் ஆணையம் டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 ஆண்டு டெஸ்லாவில் வேலை பார்த்த இந்தியர் திடீர் விலகல்.. என்ன காரணம்?

கள்ளக்காதலனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த பெண்.. திருப்பூர் அருகே பயங்கரம்..!

வெடிகுண்டு சம்பவம் எதிரொலி: டெல்லி செங்கோட்டையில் பார்வையாளர்களுக்கு தடை.!

தங்கம் விலை மீண்டும் உச்சம்.. ஒரு சவரன் 93000ஐ தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

நேற்று ஒரே நாள் தான் ஏற்றம்.. இன்று மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments