Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த விஜய்..!

Siva
திங்கள், 14 ஏப்ரல் 2025 (08:45 IST)
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மத்திய அரசு சமீபத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து, உடனடியாக இது அமலுக்கு வந்தது என்பது தெரிந்தது.
 
இந்த சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில், தற்போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யும் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.
 
மற்ற கட்சிகளின் மனுக்களுடன் விஜய்யின் மனுவும் சேர்த்து விசாரணை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே வக்பு சட்டத் திருத்தத்திற்கு கண்டனம் தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பதும், தற்போது சட்டநடவடிக்கையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments