Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”இன்று வரலாற்றில் மிகவும் மோசமான நாள்” .. வைகோ ஆவேசம்

Arun Prasath
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (15:18 IST)
இலங்கை அதிபராக கோத்தப்பய ராஜபக்‌ஷே தேர்வு செய்யப்பட்ட நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ “இன்று இலங்கை வரலாற்றில் மோசமாக நாள்” என கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன முன்னணி கட்சி வேட்பாளர் கோத்தப்பய ராஜபக்‌ஷே , தன்னை எதிர்த்து போட்டியிட்ட புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “கோத்தப்பய ராஜபக்‌ஷே வெற்றி பெற்ற இந்த நாள் இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள்” என கூறியுள்ளார்.

கோத்தப்பய ராஜபக்‌ஷே, இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்‌ஷேவின் சகோதரர். மஹிந்த ராஜபக்‌ஷே ஆட்சியில் இருந்தபோது தான் இலங்கை தமிழர்கள் இனப் படுகொலை நடைபெற்றது. மேலும் ராஜபக்‌ஷே ஒரு போர் குற்றவாளி என பலர் கண்டனம் தெரிவித்து வந்தவர்களில் வைகோவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை: கடும் நெருக்கடியில் 7,360 குடும்பங்கள் !

லாக்கப் டெத் அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல், ₹2 லட்சம் நிதி உதவி!

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments