Publish Date: Thu, 30 Jan 2020 (15:51 IST)
Updated Date: Thu, 30 Jan 2020 (15:59 IST)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒன்றிய தலைவர் பதவிக்கு அதிமுக முறை கேடாக வெற்றி பெற்றுள்ளதாக கூறி 3 மணிநேரமாக திமுக எம்.பி கனிமொழி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் ஏராளமான திமுக தொண்டர்களும் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தின் போது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற லட்சுமி, சரவணனை போலீஸார் தடுத்தி நிறுத்தி அப்புறப்படுத்தினர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.