Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி தான் காரணம்.. லட்டர் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த தவெக நிர்வாகி..!

Advertiesment
விழுப்புரம்

Siva

, செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (11:44 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். கட்சியின் தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு தி.மு.க. மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியும், காவல்துறையும்தான் காரணம் என்று ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
செஞ்சி போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ள பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த 51 வயதான அய்யப்பன் என்பவர், தனது பெற்றோரை சந்திக்க மூன்று நாட்களுக்கு முன்பு அங்கு சென்றிருக்கிறார். 
 
நேற்று அவர் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். அவரது தாய் முனியம்மாள் அய்யப்பனை கண்டுபிடித்து, மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின்னர், செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட தற்கொலைக் கடிதத்தில், "விஜய் கரூர் வந்தபோது போதுமான போலீஸ் பாதுகாப்பு இல்லை. விஜய் ரசிகர்கள் நல்ல காரியங்களைச் செய்தனர். இந்த சோகத்திற்கு செந்தில் பாலாஜி தான் காரணம். போலீஸும் இதில் ஈடுபட்டிருக்கிறது. அவர் விரைவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும்" என்று அய்யப்பன் எழுதியிருந்திருக்கிறார்.
 
அய்யப்பனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்போனை பார்த்து தேர்வு எழுதிய ABVP பெண் நிர்வாகி..விடைத்தாளை பறிமுதல் செய்த கண்காணிப்பாளர்..!