Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவெக மாநாட்டிற்கு சேர் கொடுக்க முடியாது என கூறிய ஒப்பந்ததாரர்.. கேரளாவில் இருந்து வரவழைப்பு..!

Mahendran
வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (10:15 IST)
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு மதுரையில் இன்று நடைபெற உள்ள நிலையில், லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டுத் திடலில் குவிந்து வருகின்றனர். இந்த மாநாட்டிற்கான இருக்கைகளைத் தர முடியாது என ஒப்பந்ததாரர்கள் திடீரென கடைசி நேரத்தில் கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த சூழ்நிலையில், விஜய் அதிரடியாக் கேரளாவில் இருந்து நாற்காலிகளை வரவழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாட்டிற்காக ஒன்றரை லட்சம் இருக்கைகள் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், ஐந்து ஒப்பந்ததாரர்களிடம் இதற்கான பணி ஒப்படைக்கப்பட்டது.
 
ஆனால், திடீரென நான்கு ஒப்பந்ததாரர்கள் இருக்கைகள் தர முடியாது என கூறியதால், ஒன்றரை லட்சம் நாற்காலிகள் கேரளாவிலிருந்து அவசரமாக கொண்டுவரப்பட்டு, மாநாட்டு திடலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இருக்கைகள் தர மறுத்ததற்கு பின்னால் ஏதேனும் அரசியல் அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

505 வாக்குறுதிகளில் 66 மட்டும்தான் நிறைவேற்றம்.. வெள்ளை அறிக்கை குடுங்க! - அன்புமணி ராமதாஸ்!

1 சவரன் 31 ஆயிரம்தான்..! அறிமுகமாகும் 9 கேரட் தங்கம்! - வாங்கலாமா? என்ன ரிஸ்க்?

போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடக்கு தொழிலாளர்கள்! - காட்டுப்பள்ளியில் கைது நடவடிக்கை!

சீனா, ரஷ்யாவுடன் மோடி கொஞ்சி குலாவுவது வெட்கக்கேடானது! - அமெரிக்க வெள்ளை மாளிகை ஆவேசம்!

90 சதவீத பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு? எந்தெந்த பொருட்கள்? - இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments