தக்காளி விலை திடீர் உயர்வு.. சென்னையில் ஒரு கிலோ எவ்வளவு?

Siva
திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (07:56 IST)
கடந்த சில நாட்களாக குறைவாக இருந்த தக்காளி விலை, தற்போது திடீரென உயர்ந்துள்ளது, இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சில நாட்களுக்கு முன்பு, ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது. கர்நாடக மாநிலத்தில் ரூ.10-க்கு விற்பனையானதால், விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல் விட்டதாகவும், அறுவடை செய்த தக்காளியைக் கீழே கொட்டியதாகவும் செய்திகள் வெளியாகின.
 
இந்த நிலையில், தற்போது தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று  ஒரே நாளில் தக்காளி விலை மேலும் ரூ.10 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனையாகி வருகிறது. 
 
ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது, இதனால் விலை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் கருதுகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments