Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விலை திடீர் உயர்வு.. சென்னையில் ஒரு கிலோ எவ்வளவு?

Siva
திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (07:56 IST)
கடந்த சில நாட்களாக குறைவாக இருந்த தக்காளி விலை, தற்போது திடீரென உயர்ந்துள்ளது, இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சில நாட்களுக்கு முன்பு, ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது. கர்நாடக மாநிலத்தில் ரூ.10-க்கு விற்பனையானதால், விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல் விட்டதாகவும், அறுவடை செய்த தக்காளியைக் கீழே கொட்டியதாகவும் செய்திகள் வெளியாகின.
 
இந்த நிலையில், தற்போது தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று  ஒரே நாளில் தக்காளி விலை மேலும் ரூ.10 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனையாகி வருகிறது. 
 
ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது, இதனால் விலை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் கருதுகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்! ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O

ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

காதலியின் கைப்பிடிக்க மனைவி கொலை! திருட்டு என நாடகமாடிய பாஜக உள்ளூர் தலைவர்!

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

முன்பு வாக்கு திருட்டு தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments