Publish Date: Tue, 15 Sep 2020 (09:59 IST)
Updated Date: Tue, 15 Sep 2020 (10:33 IST)
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்கள் வரும் 18 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளோடு இணைந்து செயல்படும் பார்களை திறக்க வேண்டும் என பார் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. தமிழகத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் பார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் பார் உரிமையாளர்கள் வரும் 18 ஆம் தேதி முதல் பார்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்பாக பார்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.