Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மட்டும் சரக்கு கிடையாது! – அதிர்ச்சியான குடிமகன்கள்!

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (11:46 IST)
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்திலும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மதுக்கடைகள் திறக்க இருப்பதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் டாஸ்மாக் கடைகள் எப்போது திறக்கப்படும் என்ற தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்படும் நிலையில் சென்னையில் மட்டும் திறக்கப்படாதது சென்னையில் உள்ள மது பிரியர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments