Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனது பெயரைக் கெடுக்க சதி நடக்கிறது? விஜய் தேவாரகொண்டா ஆதங்கம்!

எனது பெயரைக் கெடுக்க சதி நடக்கிறது? விஜய் தேவாரகொண்டா ஆதங்கம்!
, செவ்வாய், 5 மே 2020 (10:50 IST)
நடிகர் விஜய் தேவாரகொண்டா தனது பெயரைக் கெடுக்க வேண்டும் என தெலுங்கில் சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் விதமாக அனைத்து மொழி கலைஞர்களும், நிதி திரட்டி உதவி செய்து வருகின்றனர். அதையடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவாரகொண்டா 1.30 கோடி ரூபாய் நிதியாக அளித்தார்.

மேலும் தனது அறக்கட்டளை மூலமாகவும் உதவி வேண்டுவோர் கோரிக்கை விடுக்கலாம் என அறிவித்து இருந்தார். ஆனால் அந்த அறக்கட்டளை குறித்தும் அவர் நிதிக் கொடுக்கவில்லை என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அதிருப்தியடைந்த விஜய், ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டு ‘அதில் எனது புகழைக் கெடுப்பதற்காக இதுபோன்ற செய்திகள் வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாட்டு வண்டியில் நிவாரண பொருட்கள் வழங்கிய சல்மான் கான் - வைரல் வீடியோ!