Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுக்கடை என்பது யாதெனில்? வைரமுத்து டிவிட்!!

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (11:33 IST)
மதுக்கடை திறப்பப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து. 
 
ஒரு மாததிற்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்த மதுக்கடைகள் தமிழ்நாட்டில் வரும் 7 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7 மணி நேரம் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
 
கள்ள சாரயத்தை ஒழிக்கவும், மக்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று மது வாங்குவதை தடுக்கவும் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கும் முடிவு அரசு மனமுவந்து எடுத்த முடிவல்ல என அரசு தரப்பில் டாஸ்மாக் திறக்கப்படுவதற்கான காரணம் என்னவென விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இதற்கு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.... 
 
மது என்பது - அரசுக்கு வரவு; அருந்துவோர் செலவு.
மனைவிக்குச் சக்களத்தி; மானத்தின் சத்ரு.
சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை.
ஆனால், என்ன பண்ணும் என் தமிழ் 
மதுக்கடைகளின் நீண்ட வரிசையால் நிராகரிக்கப்படும்போது?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கரூர் விவகாரம்.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் புதிய தலைமுறை நீக்கமா? அண்ணாமலை கண்டனம்..!

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள்.. தரையில் அமர்ந்து குழந்தை பெற்ற கர்ப்பிணி; அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யின் பாதுகாப்பு 'Y' பிரிவிலிருந்து 'Z' பிரிவுக்கு மாற்றமா? உள்துறை அமைச்சகம் விளக்கம்

மருமகனோடு மாமியார் கள்ளக்காதல்! தடுக்க முயன்ற மகள் மீது கொலை முயற்சி! - ஆந்திராவில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments