Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மழை வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகள்; 300 கோடி ஒதுக்கி அரசாணை!

மழை வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகள்; 300 கோடி ஒதுக்கி அரசாணை!
, ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (10:58 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல பகுதிகளில் வீடுகள் நீரில் மூழ்கின. டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. தமிழகம் முழுவதும் மழையால் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ரூ.300 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சிக்கு 132 கோடி ரூபாயும், நகராட்சி நிர்வாகத்திற்கு 62 கோடி ரூபாயும், நீர்வளத்துறைக்கு 20 கோடி ரூபாயும், நெடுஞ்சாலை துறைக்கு 17 கோடி ரூபாயும், மின்சாரத்துறைக்கு 15 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம்; மாணவர் மரணம்! – அரக்கோணத்தில் பரபரப்பு!