Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!!

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!!
, திங்கள், 28 பிப்ரவரி 2022 (14:31 IST)
தமிழகத்தில் மார்ச் 3 ஆம் தேதி 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
ஆம், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மார்ச் 3 ஆம் தேதி 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லையை கடக்கும் மாணவர்களின் நிலை இதுதான் ... ராகுல் பகிர்ந்த வீடியோ!