Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

500க்கும் குறைவான கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் நிம்மதி

500க்கும் குறைவான கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் நிம்மதி
, ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (20:10 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் இன்று 500ஐவிட குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 439 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,49,007 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,209 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 119 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,707 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை தமிழக அரசு மீட்கவில்லை: எல் முருகன்