Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

அடடா மழைடா அட மழைடா... எந்தெந்த ஊருக்குனு தெரியுமா??

Advertiesment
மழை
, செவ்வாய், 6 அக்டோபர் 2020 (15:17 IST)
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு நல்ல மழை பெய்ய காத்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் மழை பெய்ய கூடும். 
 
அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளி பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.1,24,999... இவ்ளோ விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு இதுல என்ன இருக்கும்..?