Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தியேட்டர்கள் திறப்பது எப்போது? சொன்னதையே சொல்லும் கடம்பூர் ராஜூ!!

தியேட்டர்கள் திறப்பது எப்போது? சொன்னதையே சொல்லும் கடம்பூர் ராஜூ!!
, செவ்வாய், 6 அக்டோபர் 2020 (12:36 IST)
தியேட்டர்கள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் முடிவை விரைவில் அறிப்பார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல். 

 
அக்.15 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.  அவை..  
 
1. 50 இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம்
2. ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும்
3. அனைவரும் மாஸ்க் அணிந்த படியே தியேட்டருக்கு வந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும் 
4. திரையரங்கு உள்ளே உணவு, நொறுக்குத் தீனி வழங்க தடை விதிக்கப்படுகிறது
5. ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்
6. வெப்பநிலை பரிசோத்னைக்கு பிறகே ரசிகர்கள் திரப்படத்தை பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும்
7. திரைப்பட இடைவெளியின் போது எழுந்து வெளியே செல்லாமல் இருக்கையிலேயே இருக்கவும் அறிவுரை
 
இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது என அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர், திரைப்படத்துறை, சின்னத்திரைக்கு பல்வேறு தளர்வுகளையும், நிதியுதவியையும் தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். 
 
தியேட்டர்களை திறந்தால் மூன்று மணி நேரம் சிறிய இடத்திற்குள் அதிக மக்கள் இருக்கும்படியான சூழல் உண்டாகும். எனவே, தியேட்டர்கள் திறப்பது குறித்து மத்திய அரசும் தமிழக மருத்துவர் குழுவும் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வர் அதுகுறித்த முடிவை விரைவில் அறிப்பார் என கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிக்கூடங்களை திறக்க இது சரியான நேரம் இல்லை! – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!