உள்ளத்தில் தமிழ் உலகிற்கு ஆங்கிலம்.. இரு மொழி கொள்கையால் வெல்வோம்.. ஈபிஎஸ்

Mahendran
வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (15:28 IST)
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் செய்த பதிவில் உள்ளத்தில் தமிழ், உலகிற்கு ஆங்கிலம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் உலகத் தாய்மொழி நாளான இன்று,  நம் தாய்நிகர் #தமிழ் மொழியைப் போற்றி வணங்குவதுடன்,
 
எல்லா மொழிகளுக்கும், எம்மொழி பேசும் மக்களின் உணர்வுகளுக்கும் சமத்துவப் போக்குடன் எப்போதும் மதிப்பளித்து, அதே சமயம் எம்மொழியை நம்மீது எவர் திணிக்கத் துணிந்தாலும் அதனை "உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்" என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம்!
 
முன்னதாக மத்திய அரசின் மும்மொழி கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது என்பதும் தமிழகத்தை பொறுத்தவரை எப்போதுமே தமிழ் ஆங்கிலம் என இரு மொழி கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும் என அதிமுக தரப்பில் இருந்து திட்டவட்டமாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையனுக்கு இன்சல்ட்?!.. ஆதரவாளர்கள் குமுறல்!...

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்!.. நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்!...

பேட்டியில் தொகுப்பாளருடன் கட்டிப்பிடி சண்டை போட்ட ராம்தேவ்!.. வீடியோவால் பரபரப்பு!...

SIR: 97 லட்சம் பெயர்கள் நீக்கம்!.. முதல்வர் ஸ்டாலின் நெக்ஸ்ட் மூவ் என்ன?...

மேற்குவங்கத்திற்கு செல்ல முடியாமல் திடீரென திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments