Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசை கண்டித்து மீண்டும் போராட்டம்.. திமுக அதிரடி அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (15:22 IST)
மத்திய அரசை கண்டித்து சமீபத்தில் திமுக போராட்டம் நடத்திய நிலையில், பிப்ரவரி 25ஆம் தேதி மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என திமுக மாணவர் அணி தெரிவித்துள்ளது.

திமுக மாணவர் அணி கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் ஐந்து தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

அதில், மதத்தின் பெயரால் பிற்போக்கு சிந்தனையை தமிழ்நாட்டில் விதைக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

 மத்திய கல்வி மந்திரியின் ஆணவப் பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு, தமிழ்நாட்டு கல்வி நிதியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், மத்திய அரசுக்கு எதிராக பிப்ரவரி 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நாளில், மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகை செய்து போராட்டம் நடத்துவோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments