Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அபிராமிக்கு பிரியாணி கொடுத்துவிட்டு உல்லாசமாக இருப்பேன் - சுந்தரம் பகீர் வாக்குமூலம்

Advertiesment
அபிராமிக்கு பிரியாணி கொடுத்துவிட்டு உல்லாசமாக இருப்பேன் - சுந்தரம் பகீர் வாக்குமூலம்
, திங்கள், 3 செப்டம்பர் 2018 (11:52 IST)
பிரியாணி கொடுக்கல் வாங்கலில் அபிராமிக்கும், சுந்தரத்திற்கும் இடையே நெருக்கம் அதிகமானது தெரியவந்துள்ளது.

 
அந்த பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், எனவே, அதற்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் அவர் தப்பி செல்ல திட்டமிட்டதாகவும் அபிராமி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சுந்தரம் மற்றும் அபிராமியை போலீசார் கைது செய்துள்ளனர். விரைவில் இருவரையும் சிறையில் அடைக்கவுள்ளனர். 
 
இந்நிலையில், போலீசாரிடம் சுந்தரம் அளித்த வாக்குமூலத்தில் “நான் வேலை செய்யும் பிரியாணி கடைக்கு அபிராமி அடிக்கடி வருவார். அப்போது எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் குறிப்பிட்ட அளவை விட்ட அதிக அளவில் பிரியாணி கொடுத்து அபிராமியுடன் நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டேன். அதன் பின் அவர் தொலைப்பேசியில் பிரியாணி ஆர்டர் கொடுப்பார். அப்போது, வீட்டிற்கு சென்று பிரியாணி கொடுத்துவிட்டு, அவருடன் உல்லாசமாக இருப்பேன். என் வீட்டிற்கு அவரை அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளேன்’ என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நேரத்தில் சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்