Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அபிராமிக்கு அதிக பிரியாணி கொடுத்து வளைத்தேன் - கள்ளக்காதலன் வாக்குமூலம்

அபிராமிக்கு அதிக பிரியாணி கொடுத்து வளைத்தேன் - கள்ளக்காதலன் வாக்குமூலம்
, திங்கள், 3 செப்டம்பர் 2018 (11:35 IST)
குன்றத்தூரில் விஜய் என்பவரின் மனைவி அபிராமி, தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

 
அந்த பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், எனவே, அதற்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் அவர் தப்பி செல்ல திட்டமிட்டதாகவும் அபிராமி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சுந்தரம் மற்றும் அபிராமியை போலீசார் கைது செய்துள்ளனர். விரைவில் இருவரையும் சிறையில் அடைக்கவுள்ளனர்.
 
இந்நிலையில், போலீசாரிடம் சுந்தரம் அளித்த வாக்குமூலத்தில் “நான் வேலை செய்யும் பிரியாணி கடைக்கு அபிராமி அடிக்கடி வருவார். அப்போது எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் குறிப்பிட்ட அளவை விட்ட அதிக அளவில் பிரியாணி கொடுத்து அபிராமியுடன் நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டேன்” என அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 கோடிக்கு கார் வெச்சுருப்பீங்க, ஆனா நிவாரண நிதிக்கு சில லட்சம் தானா? நடிகர்களை விளாசும் சீனியர் நடிகை