Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரோந்து பணிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம்: காவல்துறையினர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு..!

Advertiesment
காவலர் ரோந்து

Mahendran

, வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (11:02 IST)
ரவுடிகள் மற்றும் குற்ற செயல்களைத் தடுக்கும் விதமாக, ரோந்து பணிகளை மேற்கொள்ளும்போது காவலர்கள் தனியாக செல்லக் கூடாது என்று மூத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 
 
சமீபத்தில் திருப்பூரில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ரோந்து பணிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இது குறித்துப் பேசிய உயரதிகாரிகள், ரவுடிகள், கூலிப்படையினர் மற்றும் பழைய குற்றவாளிகள் வசிக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக கூறினர். மேலும், இந்த இடங்களில் குற்றங்கள் நடந்தால், ரோந்து செல்லும் காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். 
 
முக்கிய இடங்களில் ரோந்து பணிகளுக்குச் செல்லும்போது, காவலர்கள் தனியாக செல்லாமல், குழுவாக செல்ல வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். ரோந்து பணிகளை இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுடன் பல ஆண்டுகள் கட்டமைத்த உறவு பாதிப்படைய வாய்ப்பு; டிரம்ப்பை எச்சரிக்கும் அமெரிக்க செனட்டர்