Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – புதிய தேர்வு அட்டவணை விவரங்கள்!

10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – புதிய தேர்வு அட்டவணை விவரங்கள்!
, செவ்வாய், 19 மே 2020 (11:48 IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்வுகளை ஒத்தி வைத்திருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டன. பிறகு அடுத்த மாதம் ஜூன் முதல் தேதியிலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நாளே தேர்வுகள் தொடங்குவதில் உள்ள சிரமங்களை பல கட்சிகளும், மக்களும் கூறி வந்தனர். இந்நிலையில் இன்று முதலைமைச்சருடன் ஆலோசித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வுகளை ஒத்தி வைத்து புதிய தேர்வு அட்டவணையை வழங்கியுள்ளார்.

அதன்படி ஜூன் 15ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன.

ஜூன் 15 – மொழிப்பாடம்
ஜூன் 17 – ஆங்கிலம்
ஜூன் 18 – கணிதம்
ஜூன் 22 – அறிவியல்
ஜூன் 24 – சமூக அறிவியல்

மேலும் ஜூன் 20ல் விருப்பப்பாடமும், ஜூன் 25ல் தொழில்கல்வி தேர்வுகளும் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் விற்பனை பத்தி நீங்களே முடிவெடுங்க! – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி!