Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமாவளவன் குறித்து கேலி சித்திரம்! – திரௌபதி பட ஓவியர் கைது!

திருமாவளவன் குறித்து கேலி சித்திரம்! – திரௌபதி பட ஓவியர் கைது!
, செவ்வாய், 19 மே 2020 (09:40 IST)
திருமாவளவன் குறித்து கேலிசித்திரம் வெளியிட்ட திரௌபதி பட ஓவியர் கைது செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் திமுகவினர் சிலர் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதுகுறித்து பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் கூட்டணியில் உள்ள வி.சி.க தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவிக்காமலே இருந்து வந்தார்.

இதுகுறித்து திரௌபதி படத்தில் ஓவியராக பணிபுரிந்த சுரேந்திரகுமார் கேள்வி எழுப்பி வந்துள்ளார். தற்கால அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் கணக்கில் அரசியல் கேலி சித்திரங்கள் வரைந்து வெளியிட்டு வந்த அவர், திருமாவளவனின் மௌனம் குறித்து முன்னர் வரைந்த கேலி சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது விடுதலை சிறுத்தை கட்சியினரை கோபப்படுத்தியுள்ளது.

இதுபற்றி காவல்நிலையத்தில் விசிக வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விழுப்புரத்தில் உள்ள ஓவியர் சுரேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் திருமாவளவனை கேலி செய்ததற்காக கைது செய்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை மிக கேவலமாக சித்தரிக்கும் ஓவியர்களை கைது  செய்வதில்லை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! – மீளுமா இந்தியா?