Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி மற்றும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! முன்பதிவு தொடங்கியது..!

Mahendran
வியாழன், 25 செப்டம்பர் 2025 (17:56 IST)
வரவிருக்கும் பிரம்மோற்சவம் மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து திருப்பதி மற்றும் திருச்செந்தூர் கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
 
திருமலை பிரம்மோற்சவ விழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்களுக்காக, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், மற்றும் செங்கோட்டை ஆகிய நகரங்களிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும்.
 
அதேபோல், திருச்செந்தூர் மற்றும் குலசை கோயில்களில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் கோவையில் இருந்து அக்டோபர் மாதம் வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
இந்தச் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளைப் பயணிகள் http://tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments