Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாமலை சொல்வது எங்களுக்கு வேதவாக்கு இல்லை: செல்லூர் ராஜூ..!

Advertiesment
அண்ணாமலை சொல்வது எங்களுக்கு வேதவாக்கு இல்லை: செல்லூர் ராஜூ..!
, திங்கள், 3 ஏப்ரல் 2023 (09:24 IST)
அண்ணாமலை சொல்வது எங்களுக்கு வேதவாக்கு இல்லை என்றும் அவர் பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஏதாவது சொல்வார் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலை அவர் தனது கருத்தை சொல்லி இருக்கிறார் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி என அமித்ஷாவே சொல்லிவிட்ட நிலையில் அண்ணாமலை சொல்வது எங்களுக்கு வேத வாக்கு இல்லை என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 
 
அண்ணாமலை அவர் கட்சியை வளர்ப்பதற்காக ஒரு தலைவராக சொல்லும் கருத்தைதான் அவர் சொல்லியிருக்கிறார் என்றும் அதில் தவறான கருத்து எதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் இன்னொரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 
 
மேலும் கூட்டணி குறித்து இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது என்றும் கூட்டணி குறித்து பேசுவதற்கு தகுந்த காலம் இருக்கிறது என்றும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
 
Edited by siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சளி, காய்ச்சலுக்கான 59 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தகவல்