எனக்கு கூட தான் இதைவிட அதிகமாக கூட்டம் கூடியது.. விஜய் குறித்த கேள்விக்கு சரத்குமார் பதில்..!

Siva
புதன், 17 செப்டம்பர் 2025 (17:10 IST)
நடிகர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூடிய கூட்டத்தை பார்த்து அனைத்து கட்சிகளும் அச்சமடைந்துள்ள நிலையில், பாஜக நிர்வாகி சரத்குமார் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் கூட்டத்தை விட தனக்கு 1996 ஆம் ஆண்டு அதிக கூட்டம் கூடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் திருச்சியில் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூடிய கூட்டம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு சரத்குமார் பதிலளித்தார். அப்போது அவர், "1996-ல் நானும் இதுபோன்று கூட்டங்கள் கூட்டியிருக்கிறேன். விஜய்யின் கூட்டத்தை விட எனக்கு அப்போது அதிக கூட்டம் கூடியது. ஆனால், அப்போது சமூக வலைதளங்கள் இல்லை" என்று தெரிவித்தார்.
 
மேலும், "நான் 'நாட்டாமை', 'சூர்யவம்சம்' போன்ற வெற்றி படங்களை அளித்த பிறகுதான் அரசியலுக்கு வந்தேன். சினிமாவில் இருந்து ரிட்டர்யடு ஆகிவிட்டு நான் அரசியலுக்கு வரவில்லை" என்றும் அவர் கூறினார்.
 
"தேர்தலில் ஆட்சி அமைப்போம் என்று அனைவரும் கூறுவதுதான். விஜய்க்கும் அந்த உரிமை உண்டு. ஆனால், மக்கள் தான் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments