Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி என்னை முதல்வர் வேட்பாளருக்காக அழைத்தார் – சகாயம்

ரஜினி என்னை முதல்வர் வேட்பாளருக்காக அழைத்தார் – சகாயம்
, வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:17 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.

இன்னும் சில நாட்களே இருப்பதால் அனைத்துக் கட்சிகள் தீவிரளமாஅ போஸ்டர்களும் விளம்பரங்களும் பிரசாரமும்  செய்து வருகின்றனர்.கடைசி 2 நாட்கள் 21 மணி நேரம்கூடுதலாக பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் அரசியலில் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்து, சகாயம் அரசியலமைப்பு என்ற கட்சியைத் தொடங்கினார்.

தன் கட்சி சார்பில் போடியிட்யிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சகாயம் பிரசாரம் செய்து வருகிறார்.  இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட நடிகர் ரஜினிகாந்த் 2 ஆண்டுகளுக்கு முன்பு அழைப்பு விடுத்தார். ஆனால் நான் அதில் நாட்டம் காட்டவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சகாயம் தனது அரசியலமைப்பில் இருந்து 20 வேட்பாளர்கள் போட்டியிட வைப்பதாக தெரிவித்துள்ளார்/ ஆனால் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகக்கவசம் அணியாவிட்டால் மதுபானம் கிடையாது –சத்தீஸ்கர் அரசு