Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா …சின்னக்குழந்தையும் சொல்லும்- குஷ்பு டுவீட்

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா …சின்னக்குழந்தையும் சொல்லும்- குஷ்பு டுவீட்
, வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:14 IST)
நடிகர் ரஜினிகாந்த்துக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சினிமா துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது அறிவித்தார்.

இதைனையடுத்து, மத்திய அரசிற்கு ரஜினிகாந்த் நன்றி கூறி..இந்த விருதை  தனது ரசிகர்களுக்கு சமர்பிப்பதாகக் கூறினார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு சக நடிகர்கள், இயக்குநர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து…நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டி ரஜினியை வாழ்த்தியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு தாதாசாஹேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு நடிகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், தயாரிப்பாளரும் மிகச் சிறந்த பங்காற்றியுள்ள ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள்.

இதற்கு முன் இந்த உயரிய விருது, சிவாஜிகணேசன், லதாமங்கேஸ்கர்,அமிதாப் பச்சன், வினோத் கண்ணா, கே. பாலசந்தர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலிஸ் தேதி அறிவிப்பு!