Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆண்டுகள் சிறை தண்டனை.. நூலிழையில் தப்பித்த பொன்முடி..!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (11:01 IST)
அரசியலமைப்புச் சட்டப்படி மூன்று ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை பெற்றால் மட்டுமே தண்டனையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அந்த வகையில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததால் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரு மாதம் அதிக சிறை தண்டனை கிடைத்திருந்தால் கூட அவர் தண்டனை நிறுத்தி வைக்க முடியாது என்பதால் அவர் நூலிழையில் இப்போதைக்கு தப்பித்துள்ளார் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 
 
3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தண்டனையை நிறுத்தி வைக்க மட்டுமே வாய்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி  குற்றவாளி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது பதவி உடனடியாக பறிபோனது.  
 
இந்த நிலையில் தங்களது தண்டனையை குறைக்க வேண்டும் என்று பொன்முடியின் மனைவி கோரிக்கை வைத்த நிலையில் இதுகுறித்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தில் வைக்க நீதிபதி அறிவுறுத்தி  உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments