Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக வாக்காளர்களுக்கு தமிழில் டுவிட் போட்டு வேண்டுகோள் விடுத்த பிரதமர்!

தமிழக வாக்காளர்களுக்கு தமிழில் டுவிட் போட்டு வேண்டுகோள் விடுத்த பிரதமர்!
, செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (07:14 IST)
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது என்பதும் பொதுமக்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதன் காரணமாக வெயில் வருவதற்கு முன்னரே வாக்களிக்க வேண்டும் என்று பல வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். காத்திருக்கும் வாக்காளர்கள் தனிமனித இடைவேளையை கடைபிடிக்க தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்
 
மேலும் இன்று தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து பிரதமர் மோடி தமிழக, புதுவை, கேரள வாக்காளர்களுக்கு தனது டுவிட்டரில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் தமிழக மக்களுக்கு தமிழில் டுவிட் செய்து கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால் அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றும், இன்று நடைபெறும் தேர்தலில் அதிக அளவில் வாக்களிக்குமாறு புதுச்சேரி மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் தமிழில் தெரிவித்துள்ளார் 
 
அதேபோல் கேரள மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் மலையாளத்திலும் தனது டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது: வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் பொதுமக்கள்!