ஓபிஎஸ் கூடாரம் காலி.. இருந்த ஒரே ஒரு பிரமுகரும் திமுகவில் இணைந்தார்..!

Mahendran
செவ்வாய், 4 நவம்பர் 2025 (11:49 IST)
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளரும், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியன், இன்று காலை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.
 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவர் தன்னை இணைத்துக்கொண்டார். தி.மு.க.வில் இணைந்ததை தொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்குத் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
 
செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் பாண்டியன், "தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலினை ஏற்று தி.மு.க.வில் இணைந்தேன். அ.தி.மு.க. பா.ஜ.க.வின் கிளை அலுவலகமாக செயல்படுகிறது," என்று விமர்சித்தார்.
 
ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் விலகியதால், ஓ.பி.எஸ். கூடாரம் காலியாகிவிட்டதாக விமர்சனம் செய்யப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! ரிசல்ட் எப்போது? - முழு விவரம்!

அதிமுகவுக்கு இரட்டை இலையை கொடுக்காதீங்க! தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.30,000.. இலவச மின்சாரம் - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதிகள்

மோடியின் சோட்டா பாய் தான் தேஜஸ்வி யாதவ்.. ஒவைசி கடும் விமர்சனம்..!

40 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்தியர் நாடு கடத்தப்படுகிறாரா? அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments