Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

Siva
ஞாயிறு, 20 ஜூலை 2025 (08:29 IST)
ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் இன்றும், நாளையும் மூடப்படும் என உள்ளூர் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
தென் இந்திய கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களாகவே ஊட்டியில் மழை பெய்து வரும் நிலையில், இன்றும், நாளையும் மிக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், எட்டாவது மைல், ட்ரீ பார்க், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் தங்கள் திட்டங்களை மாற்றியமைத்து, ஊட்டிக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
மேலும், ஊட்டியில் இன்று காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், சுற்றுலா தலங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

9 கிலோ சங்கிலி அணிந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்த நபர்.. காந்தத்தால் இழுத்து பரிதாப பலி..!

லிவ் -இன் உறவில் வாழ்ந்து வந்த பெண் உதவி காவல் ஆய்வாளர் கொலை.. CRPF வீரர் கைது..!

ரூ.3200 கோடி மதுபான ஊழல்.. ஜெகன்மோகன் கட்சியின் எம்.பி. கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments